குருமனைத் திறப்பு விழா நிகழ்விற்கான றிங்ஸ் மற்றும் சிற்றுண்டிக்கான செலவுகளை தாம் ஏற்பதாக ரவி – ரத்தினாவதியவர்கள் குடும்பம் அறிவித்துள்ளனர். இது தமது காலமான மகனின் பிறந்த நாளின் நினைவாகச் செய்வதாகக் கூறியிருக்கின்றனர்.
பங்குத்தந்தை மற்றும் குருமனைத் திறப்பு விழா செலவுகளுக்காக 10624 ரூபாவை சாந்தா டானியேல் அவர்கள் அனுப்பி வைத்துள்ளார்.
பங்குந்தந்தை மற்றும் குருமனைத் திறப்பு விழா செலவாக நம் ஊறணியின் நம்பிக்கை குட்டியண்ணா அவர்கள் 10000 ரூபாவைத் தனியாக அனுப்பியுள்ளார். (ஆலயம் மற்றும் ஊர் தேவைக்காக கியூடெக் மூலம் தொடர்ந்து இவர் உதவி வருவது யாவரும் அறிந்ததே.)
இப்பெருந்தகைகளுக்கு எமது நன்றிகளைத் தெரிவிப்பதோடு இவர்களைத் தொடர்ந்தும் இறைவன் ஆசீர்வதிக்க வேண்டுமென எம் புனிதன் அந்தோனி முனியோனின் வாயிலாக இறைஞ்சுகின்றோம்.
ஊறணியின் குருமனைக்கு மேலும் அன்பளிப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
திரு.திருமதி முத்துலிங்கம் பாமினி, திருச்செல்வம் மேரி ஸ்ரெலா (மணி), லீனப்பு விமலராணி மற்றும் பிரான்சிலிருந்து ஓர் அன்பர் என மேலும் நான்கு குடும்பத்தினர் தலா 5000 ரூபாக்களை அன்பளிப்பாக வழங்கியிருக்கின்றார்கள்.
இப்பெரியோர்களுக்கு எமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் குருமனைத் தேவைகள்
________________________________
அலுமாரி -01
புத்தக அலுமாரி -01
கட்டில் – 02
அலுவலக மேசை-01
அலுவலக கதிரைகள்
செற்றி
வரவேற்பு கதிரைகள்
இப் பொருட்களையும் உறவுகள் அன்பளிப்பாக வழங்கி குரு மனையின் தேவைகளை நிறைவேற்ற அழைக்கப்படுகின்றீர்கள்.
ஊறணியில் தங்கியிருந்து பணி செய்த முன்னை நாள் பங்குத்தந்தை அமரர் துரைசிங்கம் அடிகளாரின் மூலம் தான் பெற்றுக் கொண்ட நன்மைத்தனங்களை நினைவு கூர்ந்து, அவர் செய்த அளப்பெரிய நன்றிக்கடனுக்குப் பிரதியுபகாரமாக – புலம் பெயர்ந்து கனடாவில் வசிக்கும் திரு.ஆபேல் புஸ்பநாதன் அவர்கள் எமது புதிய குருமனைக்கு ரைல்ஸ் பதிப்பதற்காக சுமார் 3 லட்சம் என்ற பெருந்தொகையை அன்பளிப்பு செய்துள்ளார்.
இவர் கடந்த ஆனி மாதம் தாயகத்திற்கு வருகை தந்திருந்த போது எமது பங்குத் தந்தையிடம் பெரும் மனதோடு இப் பணத்தை வழங்கியிருந்தார்.
மேலும் குருமனைக்காக அன்பளிப்பு செய்தோர் விபரம்.
1. ஜேர்மனி நாட்டிலிருந்து ஓர் அன்பர் – 10000/=
2. திரு.திருமதி.ஜெயா புஸ்பாகரன் குடும்பம் – 10000/=
3. குரு மனைக்கான கேட்டின் துணி திரு.திருமதி.சறோ ஜெராட் குடும்பம் 26000/=
4. திரு.திருமதி.நிர்மலன் ஜெயராணி குடும்பம் 12500/= பெறுமதியான திருப்பீடக் கதிரை அன்பளிப்பு.
5. கனடாவில் இருந்து அன்பர் ஒருவர் 3000/=
6. திரு.வேலும் மயிலும் – 20000/=( முன்னர் ஊறணி எமிலியானுஸ் கனிஸ்ட வித்தியாலயத்திற்கு பின்புறமாக வசித்தவர்)
இப்பேருதவி புரிந்த இந்த உயர்ந்த உள்ளங்களுக்கு எமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.