திடீரென ஏற்படுத்தப்பட்ட ஒரு அருமையான சந்திப்பு. இன்று காலை 9.30 க்கு Fr.தேவராஐன்
அடிகளாருடன் ஏற்படுத்தப்ட்ட சந்திப்பை அடுத்து, பி.ப 4.00 மணிக்கு ஊறணி புனித அந்தோனியார் ஆலய வளவில் சிறிய ஒன்று கூடல் நிகழ்வு இடம்பெற்றது. குறுகிய நேர இடைவெளியில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வாக இருப்பினும் ஓர் அர்த்தமுள்ள கலந்துரையாடலாகவே இது உணரப்பட்டது.
அனைவரையும் கை கோர்த்து ஒற்றுமையின் வெளிப்பாட்டை வெளிப்படுத்தினார் எம் அருட்தந்தை. இதில் தற்காலிக ஆலயத்தின் அவசியம் பற்றிய கலந்துரையாடல் முதன்மை பெற்றிருந்தது. அத்துடன் Fr.தேவராஜன் அடிகளாரின் நிரந்தர வருகையை இதில் கலந்து கொண்ட மக்கள் வலியுறுத்தினர்.
சிறிய வழிபாட்டுடன் கலந்துைரயாடல் இனிதே நிறைவு பெற்றது.