18/02/18 அன்று நடைபெற்ற UDO கூட்ட அறிக்கை.
……………………..
இந்த கூட்டம் இலங்கையில் இருந்து திரு விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.
ஊறணியில் நடந்த துயர் சம்பவங்களிற்காக இரண்டு நிமிட அஞ்சலியுடன் இக்கூட்டம் ஆரம்பமானது .இக்கூட்டத்திற்கு இலங்கையில் இருந்து UDO சார்பில் திரு விஜயகுமார் மட்டுமே இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பாபு குடும்பத்திற்காக சேர்கப்படுகிற உதவிகளை சரியான முறையில் எப்படி அவர்களிடம் சேர்ப்பது பற்றி விஜயகுமார் இடம் கேட்கப்பட்டது. ஏற்கனவே இதுபற்றி தாங்கள் கதைத்துகொண்டிருப்பதாகவும்
எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டு தொடர்வுகொள்வதாக தெரிவித்தார். மேலும் இதுபற்றிய விடயங்களை UDO எப்படி செயல்படும் என்ற கேள்விக்கு.
UDO ஊர் அபிவிருத்திக்காகவே முழுமையாக செயல்படும் .
இப்படியான இக்கட்டான நேரங்களில் ஒருங்கமைத்து மக்களிடம் கொண்டு வந்து மக்கள் உதவி செய்தால் அந்த உதவியை
உதவிபெறும் நபரிடம் சரியான முறையில் சேர்ப்போம். இதைத்தவிர UDO வின் பொறுப்பு இதில் எதுவுமில்லை. மேலும் இலங்கையில் 18/02/2018 அன்று FR. தேவராஜன் முன்னிலையில் நடக்க இருந்த கூட்டம் நடைபெறாததால் தொடர்ந்து மற்ற விஷயங்களை பற்றி அடுத்த கூட்டத்தில் கதைப்பதாக குறுகிய நேரத்தில் இக்கூட்டம் முடிவுக்கு வந்தது. அடுத்த கூட்டம் 04/03/18 அன்று நோர்வேயில் இருந்து திரு ஸ்ரிபன் அவர்களின் தலைமையில் நடைபெறும் என்பதுடன் இக்கூட்டம் நிறைவுபெற்றது.
நன்றி UDO