இன்றைய தினம் (28.03.2018) பிற்பகல் எமது அருட்தந்தை தேவராஜன் அடிகளார், எமது Rds கட்டடத்தில் குடி புகுந்தார்.
Rds கட்டடத்தில் மின்சார இணைப்பு வேலைகள் அவசர அவசரமாக பூர்த்தியானதை அடுத்து(மின்சார சபை இன்னும் இணைப்பு வழங்கவில்லை) உடனடியாகவே இன்று அருட்தந்தை அவர்கள் குடி புகுந்தார்.
புனித வாரத்திற்குரிய வழிபாடு களை நெறிப்படுத்துவதோடு பொது வேலைத் திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கிலேயே அவர் அவசர அவசரமாக குடி புகுந்தார்.
From Viber:
அன்பறவுகளே,
இன்று நம் ஊறணயில் 31 வருடங்களின் பின் எனக்கு மீணடுமோர் முதலிரவு. தற்காலிகமாக RDS கட்டிடத்தில் நமது இனியவர்கள் தேவையான வசதிகளை செய்து தந்துள்ளனர்.
28 வருடங்களின் பின் பெரிய கிழமை வழிபாடுகள் நம்பங்கில் இடம்பெறுகின்றது. இதுவரை எட்ட நின்றவர்களும் பரிசுத்த வார வழிபாடுகளில் இணைந்து கொள்ளவும் புதிய கண்ணோட்டத்துடன் ஏனைய விடயங்களிலும் தொடரவும் வழிபிறக்கும் என நம்புகிறோம். இறைவழி சென்று வள்ளுவர்புரத்து அயலவரையும் இணைத்தே பாதங்கழுவி வழிபடுகின்றோம்
அனைவருக்கும் எனதினிய ஈஸ்டர் வாழ்த்துக்கள்.
Fr. ராஐன்.