Home / 04/11/2016 பின்பான ஊறணி / புதியதோர் கலாச்சாரமாக மாறி வரும் திருநாள்

புதியதோர் கலாச்சாரமாக மாறி வரும் திருநாள்

அன்று நடைபெறும் விருந்து. முன்பு ஊறணியில் கொடியேற்றம் அன்று மட்டுமே விருந்து அவித்து பரிமாறி மகிழ்வுறுவது வழமையாகவிருந்தது. ஆனால் போன வருடத்தில் திருநாள் அன்று மதிய போசனம் கொடுப்பதாக திருமதி டானியேல் சாந்தா அவர்களும் ஜெகன் குடும்பத்தினரும் ( டண்டன்) இணைந்து அறிவித்து கோழி இறைச்சியுடன் சாப்பாடு கொடுத்து மகிழ்ந்தார்கள்.
இந்த வருடம் ஒரு படி மேலே போய் கிட்டத்தட்ட 600 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு ஜெகன் குடும்பத்தினர் ஃபிறைட் றைஸ் கொடுத்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஊறணி Rds கட்டடத்தில் 3 பேர்களை வேலைக்கு அமர்த்தி தாமே சமைத்து இன் சுவையான அந்த உணவை வழங்கியிருந்தார்கள்.
உணவு பரிமாறும் போது ஆலய இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கலியாண வீட்டில் உணவு பரிமாறியது போல – நேர்த்தியாக சாப்பாட்டுத் தட்டுக்களில் அழகாகப் பரிமாறினார்கள்.நாவினிக்க – பசியாறிச் சென்றனர் ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்கள்.

நீண்ட தூரத்தில் இருப்பவர்களும் ” ஊறணியில் கோழிச் சாப்பாடாம்” என்று சொல்லும் அளவுக்கு இச்செய்தி பரவியிருந்தது.
ஜெகன் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு மேலும் தொழில் துறைகள் விருத்தியடைந்து ஊறணிக்கும், ஆலயத்திற்கும் தம்மாலான உதவிகள் புரிய தேவையான அருள்வரங்களை இறைவன் பொழிந்திட வேண்டுமென்று கோடியற்புதரின் மூலமாக மன்றாடுகின்றோம்.

About ratna

slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang