ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகக்கொண்ட, டொறத்தி பற்றிமாஜோதி சேவியர் அரசநிலை அவர்கள் இன்று 14.07.2020, பி.ப 10.00 மணியளவில் கொய்யாத்தோட்டம் யாழ்ப்பாணத்தில் காலமானார்.
இவர் சேவியர் அரசநிலை அவர்களின் அன்பு மனைவியும், அன்ரன் மொரிசன் அவர்களின் தாயாருமாவார்.
காலம் சென்ற றோமான்-மாகிறேட் நல்லம்மா அவர்களின் அன்பு மகளும் ,
இம்மானுவேல் ஜெயராஜா(காலம் சென்ற), அன்ரன் புஸ்பராஜா, அருட் தந்தை R.X.நேசராஜா, தோமஸ் எமில் ரட்ணராஜா, அனற் மரிய நிர்மலா (காலம் சென்ற), அவர்களின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க நிகழ்வுகள், 16.07.2020 வியாழன் அன்று ஊறணி சேமக்காலையில் இடம்பெறும்
*திருப்பலி ஒழுங்குகள் பற்றிய மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்
இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு…
தோமஸ்(France )
+33667609885
அமரர் டொறத்தி பற்றிமாஜோதி சேவியர் அரசநிலை அவர்களின் புகழுடல் நாளை 16.07.2020 (வியாழக்கிழமை) அன்று பி.ப 2.00 மணிக்கு கொய்யாத்தோட்டம் புதிய வீதி,கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு பி.ப 3.30 மணிக்கு ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு ஆயரின் இறுதி ஆசீருடன் ஊறணி புனித அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவுகள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் – குடும்பத்தினர்.
![](http://urany.com/wp-content/uploads/2020/07/0-02-0b-b340ffde332d6feadd0252b2c42ccbddeae5fe1d41d6abaf096e8785157aaff7_93b50731-768x1024.jpg)