திரு.யூட்ஸ் நிமால் யேசுதாஸன் அவர்களின்
மறைவுச் செய்தி கேட்டு உடன் வந்து எம் துயரில் பங்கெடுத்தவர்களுக்கும், உதவிகள் புரிந்தவர்களுக்கும் , தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், அயல் நாட்டிலிருந்து நேரில் வந்து துக்கத்தில் பங்கெடுத்தவர்களுக்கும், அவரின் இறுதி நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களுக்கும், இறுதி திருப்பலியை திறம்பட நடாத்திய குருவானவர்க்கும்,மலர்வளையம் செலுத்தியவர்களுக்கும்,கண்ணீர் அஞ்சலி வெளியிட்டவர்களுக்கும், இவரின் மறைவுச் செய்தியினை பிரசுரித்த ஊறணி இணையத்தளத்திற்கும் மற்றும் அனைத்து வழிகளிலும் எம் தோளோடு தோள் நின்று உதவிய அணைவரிற்கும் எமது இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேம். அன்னாரின் நினைவுத்திருப்பலி 12/04/2014 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு நடைபெறும் இந் நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இப்படிக்கு
குடும்பத்தினர்